Saturday, April 25, 2015

Living at the Right Speed - Carol Honore

original reading
http://www.awakin.org/read/view.php?tid=494

சரியான வேகத்தில் வாழ்தல்
- கரோல் ஆனர்

வேகம் மற்றும் நிதானம் என்பவை நம் வாழ்க்கை தத்துவத்தை பிரதிபலிக்கும் குறியீடுகள்.

வேகம் என்பது பொதுவாக பரபரப்பானது, ஆளுமை செய்வது, அவசரப்படுவது, முரட்டுத்தனமானது, அலசி ஆராய்வது, மேலோட்டமானது, சுறுசுறுப்பானது, பொறுமை இல்லாதது,  எண்ணிக்கை சார்ந்தது என்று கருதப்படுகிறது.

இதற்கு எதிர்மறையாக, நிதானம் என்பது, அமைதி, ஜாக்கிரதை, கவனிப்பு, சலனமற்ற, உள்ளுணர்வு சார்ந்த, அவசரமில்லா, பொறுமையான, ஆழ்ந்து சிந்திக்கும், தரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் நிலையாக கருதப் படுகிறது. மக்கள், கலாசாரம், பணி, உணவு - எல்லாவற்றோடும் நிஜமான, ஆழ்ந்த தொடர்புகளை ஏற்படுத்துவதற்கு நிதானம் தேவைப் படுகிறது.

நிதானம் என்றால் சுறுசுறுப்பில்லாத ஒரு நிலை என்று அர்த்தம் இல்லை. நிதானமாக ஒரு பணியை செய்யும்போது அதன் பலன் விரைவில் கிடைப்பதை நாம் பல விஷயங்களில் காண்கிறோம், நிதானமான மன நிலையுடன் நம்மால் துரிதமாக காரியங்களை செய்யவும் முடியும்.

நமக்கு வெளியே எவ்வளவு அவசர வேலைகள் இருந்தாலும், உள் நிதானத்துடன் எவ்வாறு நடந்து  கொள்வது என்று சில நூறாண்டுகளுக்குப் பிறகு நாம் மீண்டும் கற்றுக் கொண்டு இருக்கிறோம். இதற்கு நிதான இயக்கம் என்று பெயர் கொடுக்கப் பட்டு உள்ளத

நத்தையின் வேகத்தில் எல்லாற்றையும் செய்ய வேண்டும் என்பது நிதான இயக்க்கத்தின் மையக் கருத்து அல்ல. இந்த இயக்கத்தில் சேர்ந்துள்ளவர்கள் உங்களயும், என்னையும் போன்ற மக்கள். இந்த வேகமான், நவீன சூழ்நிலையிலும், தரமான வாழ்க்கையை விரும்புவர்கள்.

நிதான இயக்கத்த ஒரு வார்த்தையில் விவரிக்க வேண்டும் என்றால் சமநிலை  என்று சொல்லலாம். எப்போது வேகமாக ஒரு செயல்பாடு தேவைப்படுகிறதோ, அப்போது வேகமாவே செயல்பட வேண்டும். எப்போது நிதானம் தேவைப்படுகிறதோ, அப்போது நிதானத்துடன் செயல் பட வேண்டும். அதாவது, ஒவ்வொரு கணத்திலும், வாழ்வின் லயத்திற்கு ஏற்ற சரியான தாளத்தை தேர்ந்து எடுக்க வேண்டும். 

கேள்வி: நீங்கள் சூழலுக்கு ஏற்ப வேகத்தை மாற்றிய ஒரு தருணத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்.

Friday, April 17, 2015

Self Knowledge - Gibran

Original Reading
http://www.awakin.org/read/view.php?tid=310

Self Knowledge
சுய அறிவு
- கலீல் கிப்ரான்


சுய அறிவைப் பற்றி எங்களுக்கு சொல்லுங்கள் என்று ஒருவர் கேட்டார். அதற்கான பதில் இப்படி வந்தது.

ஆழ்ந்த அமைதியில் இருக்கும் உங்கள் இதயத்திற்கு பகலிரவின் ரகசியங்கள் தெரியும். ஆனால் அந்த உண்மையின் குரலைக் கேட்பதற்கு உங்கள் காதுகள் ஏங்குகின்றன.

எண்ணங்களால் எப்போதும் தெரிந்ததை நீங்கள் வார்த்தைகளாலும் அறிவீர்கள். உங்கள் கனவின் மெய்யை உங்கள் விரல்கள் தீண்ட முடியும். தீண்டவும் வேண்டும்.

மறைந்திருக்கும் உங்கள் ஆத்மாவின் நீரூற்று, எழும்பி கடலினை நோக்கிப் பாய வேண்டும். அப்போது உங்களுடைய ஆழத்தின் புதையல்கள் திறந்து காண்பிக்கப் படும். ஆனால் இவற்றை எடை போட தராசு ஒன்று தயார் செய்ய வேண்டாம்.

அறிவி்ன் ஆழத்தை கோல் கொண்டும், மிடுக்கான வார்த்தைகள் கொண்டும் தேட வேண்டாம். ஏனெனில், சுயம் என்னும் கடலிற்கு கரைகளும் இல்லை, அளவும் இல்லை...

நான் உண்மையை கண்டு பிடித்து விட்டேன் என்று சொல்வதை விட நான் ஒரு உண்மையை கண்டேன் என்று சொல்வது நல்லது. நான் ஆத்மாவின் பாதையை கண்டு பிடித்து விட்டேன் என்று சொல்வதை விட ஆத்மாவை என் பாதையில் கண்டேன் என்று சொல்லலாம்.ஏனென்றால் ஆத்மா எல்லா பாதைகளின் மீதும் பயணிக்கிறது.

அது நடக்கும் பாதை ஒரு நேர்க் கோடு இல்லை அது ஒரு நாணலைப் போல வளர்வதும் இல்லை.. ஆத்மாவின் விரிதலானது, எண்ணில்லா இதழ்கள் கொண்ட ஒரு தாமரை மொட்டின் அவிழ்தல் போன்றது.

கேள்வி
உங்கள் சுய அறிவு என்று நீங்கள் எதைக் கூறுவீர்கள்? 

Wednesday, April 8, 2015

Keep Looking and You'll See - Bo Lozoff

கவனித்தால் தென்படும்
- போ லோசோஃப்

Original Reading

உலகின் எல்லா ஞான பாரம்பரியங்களிலும் வாழ்வில் மூன்று விதிகளைக் கடைப்பிடிக்க அறிவுரை உள்ளது.
1) பொருள் மீது ஆசை கொள்ளாமல் எளிமையாக வாழ்தல்.
2) நம் வாழ்வை, நாம் விரும்பும், மற்றும் முக்கியமாக கருதும் ஒரு காரியத்திற்குஅர்ப்பணித்தல். 
3) தினமும் நம் தனிப்பட்ட ஆன்மீக பயிற்சிக்காக ஒரு சில நிமிடங்கள்ளாவது ஒதுக்குதல்..

வாழ்வின் அர்த்தத்தை நாம் வெளியே தேடினால் அதைக் கண்டுபிடிப்பது கடினம். நம்மை நாமெ நிலைப் படுதிக் கொண்டு அதைத் தேடினால், அந்த அர்த்தம் நமக்காக இந்த தருணத்தில் காத்துக் கொண்டு இருப்பதை புரிந்து கொள்வோம்.(...)

தினமும் நாம் தியானத்தில் அமர்ந்து, உண்மையாக நம் உடலும் மனமும் உணர்வதைப் சாட்சியாக பார்த்தோமானால், சிறிய பெரிய சலனங்கள் மேலெழுகின்றதை உணரலாம். முதலில் இவை நம்மை தொந்தரவு செய்வது போல இருந்தாலும், நாம் கவனித்துக் கொண்டே இருந்தால், தெளிவு பிறக்கத் தொடங்குகிறது. (...)

நம்மை நாமே ஒரு சிறிய விதத்தில் கூட ஏமாற்றிக் கொண்டோம் என்றால், நம் ஆன்மீகப் பயிற்சி அதைக் காட்டிக் கொடுக்கும். அது என்ன தவறு என்பதை நாம் கவனமாக தேடினால், அது தென்படும். அதன் பிறகு நம் தவறை நாம் திருத்திக் கொள்ள முயற்சி செய்தால், நம்மை பற்றியும், இந்த உலகைப் பற்றியும், நாம் சிறிது புரிந்து கொண்டு இருப்போம்.

கேள்வி
உங்கள் வாழ்வில் நீங்கள் முக்கியமாக கருதும் ஒரு காரியம் என்ன?