Wednesday, April 8, 2015

Keep Looking and You'll See - Bo Lozoff

கவனித்தால் தென்படும்
- போ லோசோஃப்

Original Reading

உலகின் எல்லா ஞான பாரம்பரியங்களிலும் வாழ்வில் மூன்று விதிகளைக் கடைப்பிடிக்க அறிவுரை உள்ளது.
1) பொருள் மீது ஆசை கொள்ளாமல் எளிமையாக வாழ்தல்.
2) நம் வாழ்வை, நாம் விரும்பும், மற்றும் முக்கியமாக கருதும் ஒரு காரியத்திற்குஅர்ப்பணித்தல். 
3) தினமும் நம் தனிப்பட்ட ஆன்மீக பயிற்சிக்காக ஒரு சில நிமிடங்கள்ளாவது ஒதுக்குதல்..

வாழ்வின் அர்த்தத்தை நாம் வெளியே தேடினால் அதைக் கண்டுபிடிப்பது கடினம். நம்மை நாமெ நிலைப் படுதிக் கொண்டு அதைத் தேடினால், அந்த அர்த்தம் நமக்காக இந்த தருணத்தில் காத்துக் கொண்டு இருப்பதை புரிந்து கொள்வோம்.(...)

தினமும் நாம் தியானத்தில் அமர்ந்து, உண்மையாக நம் உடலும் மனமும் உணர்வதைப் சாட்சியாக பார்த்தோமானால், சிறிய பெரிய சலனங்கள் மேலெழுகின்றதை உணரலாம். முதலில் இவை நம்மை தொந்தரவு செய்வது போல இருந்தாலும், நாம் கவனித்துக் கொண்டே இருந்தால், தெளிவு பிறக்கத் தொடங்குகிறது. (...)

நம்மை நாமே ஒரு சிறிய விதத்தில் கூட ஏமாற்றிக் கொண்டோம் என்றால், நம் ஆன்மீகப் பயிற்சி அதைக் காட்டிக் கொடுக்கும். அது என்ன தவறு என்பதை நாம் கவனமாக தேடினால், அது தென்படும். அதன் பிறகு நம் தவறை நாம் திருத்திக் கொள்ள முயற்சி செய்தால், நம்மை பற்றியும், இந்த உலகைப் பற்றியும், நாம் சிறிது புரிந்து கொண்டு இருப்போம்.

கேள்வி
உங்கள் வாழ்வில் நீங்கள் முக்கியமாக கருதும் ஒரு காரியம் என்ன? 

No comments:

Post a Comment