Friday, July 10, 2015

Laws of Love - Mahatma Gandhi

Original Reading
http://www.awakin.org/read/view.php?tid=150

 
அன்பின் விதிகள்
-- மகாத்மா காந்தி


பேரழிவுகளுக்கு மத்தியிலும் வாழ்வு தொடர்வதை நான் கண்டிருக்கிறேன் . எனவே அழிவை காட்டிலும் மேலான ஒரு விதி இருக்க வேண்டும். அத்தகைய சட்ட ஒழுங்கின் கீழ் மட்டுமே ஒரு சமுகம் புரிதலுடையதாகவும், வாழ்கை, வாழ தகுதி மிக்கதாகவும் ஆகிறது. அது வாழ்வின் விதியாகவும் இருக்குமானால் நாம் அதை நம் அன்றாட நிகழ்வுகளில் கடைபிடிப்பது அவசியமாகிறது.

எங்கெல்லாம் போர் இருக்கிறதோ , எங்கெல்லாம் எதிராளிகள் இருக்கிறார்களோ , அங்கெல்லாம் அன்பால் வென்றிடலாம். எனது சொந்த வாழ்வில், பல சமயங்களில், அழிவின் கட்டளைகள் அளிக்க முடியாத விடைகளை அன்பின் கட்டளைகள் தர கண்டிருக்கிறேன்.

அஹிம்சா மனநிலையை அடைய சீரிய மற்றும் சிரமமான பயிற்சி தேவைப்படுகிறது. அத்தகைய வாழ்வு ஒரு சிப்பாயின் வாழ்வை போன்ற இயக்க ஒழுங்கை உடையது. நம் மனம், உடல், சொல் செயல் இவை ஒத்து இயங்கும் போது மட்டுமே சரியான துல்லிய நிலையை அடையமுடிகிறது.

சத்தியம் மற்றும் அஹிம்சையை நாம் நம் வாழ்வின் கட்டளைகளாக பின்பற்ற உறுதி பூனுவோமேயானால், நம் முன் வரும் ஒவ்வொரு சிக்கலுக்கும் தீர்வு பிறக்கும். இயற்கையின் விதிகளை பின்பற்றும் விஞ்ஞானி பல்வேறு அற்புதங்களை நிகழ்த்துவது போல, அன்பின் விதிகளை விஞ்ஞான துல்லியத்தோடு கடைபிடிக்கும் ஒவ்வொரு மனிதனும் அதிக அற்புதங்களை நிகழ்த்துகிறான். இயற்கையின் விசைகளான மின்சக்தி போன்றவற்றை விட அஹிம்சை மிக நுட்பமானதும் அற்புதமானதும் ஆகும். அன்பின் விதிகள் நாமறிந்த நூதன விஞ்ஞானத்தை காட்டிலும் வல்லமை பொருந்திய விஞ்ஞானம் ஆகும்.

கரு: உங்கள் வாழ்வின் அன்பின் விதிகள் என்ன?

No comments:

Post a Comment