Friday, March 13, 2015

It All Goes Wrong Anyway by Ajahn Brahm

Original reading: 
http://www.awakin.org/read/view.php?tid=1062

தவறுகள் நடக்கத்தான் செய்யும்
- ஆஜான் ப்ரஹ்ம


நாம் வாழுமிடம் ஆஸ்ரமமாக இருக்கலாம், ஒரு நகரமாக இருக்கலாம்
அல்லது ஒரு அமைதியான மரங்கள் சூழ்ந்த தெருவாக இருக்கலாம்.
எதுவாக இருந்தாலும் பிரச்சினைகளும் கஷ்டங்களும் அவ்வப்ப்போது
வருவது என்பது இயற்கையே. சில முறை பழுதாவதுதான் நம் வீட்டில்
இயங்கும் பொருட்களின் இயற்கை,. வாழ்க்கை தங்கு தடங்கலின்றி
செல்ல வேண்டும் என்று நாம் எவ்வளவுதான் முயற்சி செய்தாலும்
அப்படி நடப்பது அரிது.


துக்கம் என்ற வார்த்தையின் ஒரு ஆழமான அர்த்தம்,.உலகம் நமக்கு
கொடுக்க முடியாத ஒன்றை அதனிடம் கேட்பது. மிகச் சரியான ஒரு
வீடும், வேலையும் வேண்டும் என்று கேட்கிறோம். இப்பொழுதே ஆழ்ந்த
தியானமும், ஞானமும் வேண்டும் என்று கேட்கிறோம். ஆனால் இந்த
பிரபஞ்சத்தினால் இவற்றைத் தர இயலாது. தர முடியாத ஒன்றைக்
கேட்கிறோம்.என்றால் துக்கத்தைக் கேட்கிறோம்.என்றுதான் பொருள்.


பணி செய்யும் போதும், தியானம் செய்யும் போதும், அவ்வப்போது சில
தவறுகள் நேரிடும் என்பதை நாம் ஒத்துக்கொள்ள வேண்டும். நம்முடைய
வேலை, இந்த உலகத்தை நம் ஆசைக்கேற்ப மாற்றுவதல்ல. நம்முடைய
பணி, கவனித்து, புரிந்து கொண்டு, ஏற்றுக் கொண்டு, விட்டு விடுதல் ஆகும்.

உடல், மனம், குடும்பம் மற்றும் உலகத்துடன் நாம் சண்டை போட போட,
நம்மால் உண்டாகும் காயங்களும், நமக்கு உண்டாகும் வலியும்,
அதிகமாகும்.


சில சமயங்களில் நம்மால் தினசரி வாழ்வில் இருந்து சற்றே தள்ளி
நின்று மொத்தமாக வாழ்க்கையைப் பார்க்க முடிகிறது. அவ்வப்போது
தவறுகள் நடப்பது இயற்கையே என்று புரிந்து கொள்ள முடிகிறது. நாம்
உழைக்கிறோம், கஷ்ட நஷ்டங்களை சந்திக்கிறோம், நம் வீடு, மனம்,

உடல் மற்றும். வாழ்க்கையை, மிக சரியானதாக அமைப்பதற்கு பாடு
படுகிறோம்,  ஆனாலும், எல்லாவற்றிலும், கொஞ்சம் தவறுகள் நடக்கத்தான்
செய்யும்.

No comments:

Post a Comment